கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கல்வி உதவி தொகை பெற  சிறுபான்மை சமூக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு 

மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை சமூக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:39 am

எஸ். பாண்டியன்

மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை சமூக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்குவதோடு, வசதியில்லாமல் கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் சார்பில் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்தோர் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12000 கல்வி உதவித் தொகை வழஹ்கப்படுகிறது. இத்தொகை இரண்டு தவணைகளில்(11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரமும்) வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை பெற கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக மட்டும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1343 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும். 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும. அதேபோல், நிகழாண்டில் 2013-14 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கிகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11-ம் வகுப்பு படித்து வருபவராக இருக்க வேண்டும். அதற்கான சேர்க்கை அனுமதிச் சீட்டு கடித நகல் இணைத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான சான்றிதழ், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் ஆகியவைகளை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். இதற்கான  விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை இணைய தளத்தில் இருந்து படியிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர் 11-ம் வகுப்பு சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து உரிய சான்றுகளுடன் கையொப்பம் செய்து குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக The Secretary, Maulana Azad Education Foundation, (Ministry of Minority Affairs, Goverment of India) Cheimsford road, New Delhi-110055 என்கிற முகவரிக்கு வருகிற 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும்.

அதேபோல், 2014-15 ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்படிவங்கள், http:maef.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை தொடர்பு உடைய கல்வி நிலையங்கள் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற நிகழாண்டில் உரிய நாள்களுக்குள் சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.